NFPE

Wednesday 26 September 2018

Monthly meeting with SPOs

Dear Comrades,


  The monthly meeting with SPOs will be held on 28.09.2018 1400 hrs.  Comrades are requested to send the subjects to Secretary immediately.

C. Sasikumar (9442234938)
Divisional Secretary
AIPEU Group 'C'
Srirangam Division

Monday 17 September 2018

திருவரங்கம் கோட்ட அஞ்சல் மூன்று மாநாடு - 16.09.2018

திருவரங்கம் கோட்ட அஞ்சல் மூன்று மாநாடு
திருவரங்கம் கோட்டத்தின் அஞ்சல் மூன்று மாநாடு இன்று (16.09.2018) கோட்டத் தலைவர் தோழர். K. ராஜு அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வு போட்டியின்றி ஏகமனதாக நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் :
கோட்டத் தலைவர்:
தோழர் A. மோகன்ராஜ் 

கோட்டச் செயலர்:
தோழர்.C. சசிகுமார்

நிதிச் செயலர்:
தோழர். D.சுரேஷ்பாபு
மாநாட்டில் மாநில நிதி செயலர் தோழர். A. வீரமணி மத்திய மண்டல செயலர் தோழர். R. குமார் .மாநில அமைப்பு செயலர் தோழர் C. சசிகுமார் மற்றும் GDS சங்க மாநில நிதி செயலர் தோழர். R. விஷ்ணுதேவன், அஞ்சல் மூன்று கோட்டச் சங்க முன்னாள் தலைவர். தோழர்.M. திருசங்கு ஆகியோர் சிறப்புரை /வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டில் முன்னாள் தலைவர் தோழர். K. இராஜு முன்னாள் செயலர் தோழர்  T. தமிழ்செல்வன் ஆகியோர்க்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக் கப்பட்டது.
நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில கீழே உங்களின் பார்வைக்கு.





















NFPE, Srirangam

Thursday 7 June 2018

அஞ்சலக தொழிற்சங்க வரலாற்றில் ஒரு புது அத்தியாயம். ஒற்றுமைக்கும், உறுதிக்கும் கிடைத்த வானளாவிய வெற்றி!!!


தோழர்களே! தோழியர்களே!!
வணக்கம்.
அஞ்சலக தொழிற்சங்க வரலாற்றில் முன் எப்பொழுதும் இல்லா வண்ணம் GDS தோழர்களின்கோரிக்கையான கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான அம்சங்களை உடனடியாக அமுல்படுத்தவேண்டும் மற்றும்  தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பு முடிவினை உடனே வெளியிடவேண்டும் என்ற இந்த இரண்டு கோரிக்கைகளை மட்டும் முன்வைத்து 22.05.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை NFPE – COC தமிழகத்தில் முதலில் அறிவித்தது.  அதன் பொருட்டு NFPE அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் அனைத்து GDS (NFPE – GDS, AIGDSU, FNPO ஆண்ட் BPEF) சங்கங்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் களம் கண்டன. நமது கோட்டத்தில் பெரம்பலூர் தலைமை அஞ்சலகத்தில் பணிபுரியும் FNPO – P3யை சார்ந்த தோழியர்கள் அமுதா, ரம்யா மற்றும் துறையூர் தலைமை அஞ்சலகத்தில் பணிபுரியும் R. சதாசிவம் (SC/ST Federation)ஆகியோர் மூன்று நாட்கள் வேலைநிறுத்தத்தில் நம்முடன் பங்குபெற்று சிறப்பித்தனர்.

2, 3 மற்றும் 4 நான்கு நாட்களில் இலாக்கா ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை நமது கோட்டத்தில் விலக்கிக்கொண்டாளும் GDS தோழர்கள் தங்களது களத்தை உறுதியாக கட்டமைத்தார்கள். அதற்கு NFPE அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு தோழர்கள் அரணாக நின்று அவர்களின் போராட்டத்தை வடிவமைத்து முன்னெடுத்து சென்றார்கள்.

7 ம் நாள் போராட்டமாக மண்டல அளவில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

11 வது நாள் போராட்டமாக பெரம்பலூர் தலைமை அஞ்சலகவாயிலில் அடையாள உண்ணாவிரத போராட்டமும், அதன் முடிவில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் 
திரு.R.P. மருதராஜா அவர்களிடம் கோரிக்கை மனுவினை அளித்தோம். அவரும் நமது துறை அமைச்சரிடம் இது சம்பந்தமாக பேசுவதாக தெரிவித்தார்.

14 ம் நாள் போராட்டமாக மத்திய மண்டலத்தில் இருந்து பெருவாரியான தோழர்களும், தோழியர்களும் கலந்துக்கொண்ட மனிதசங்கிலி போராட்டம் திருச்சியில் நடைபெற்றது.  இதில் நமது கோட்டத்தில் இருந்து மட்டும் 250 க்கும் அதிகமான தோழர்களும், தோழியர்களும் கலந்துகொண்டனர்.

15 நாட்கள் சென்ற நிலையிலும் எந்த ஒரு பேச்சு வார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.  ஆனாலும் GDS தோழர்கள் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தில் இருந்து ஒரு சதவிகிதம் கூட பின்வாங்கவில்லை.  வேலைநிறுத்த போராட்டம் முன்னிலும் முழுவீச்சுடன் நடந்துக்கொண்டிருந்தது.
சரித்திர வெற்றி
16 ம் நாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்ற நிலையில் Cabinetகூடி கமலேஷ் சந்திரா கமிட்டியின் மீதான தன்னுடைய ஒப்புதலை வழங்கியது.  இதன் மூலம் தங்களுடைய 16 நாள் வேலைநிறுத்த போராட்டத்தினை நமது GDS தோழர்கள் வெற்றிகரமாக விலக்கிக்கொண்டார்கள்.

  தங்களது ஊதியத்தை இழந்தாலும் தங்களின் ஒற்றுமையை இழக்காத காரணத்தினால் இன்று முழு வெற்றியையும் சுவைக்கும் நமது GDS தோழர்கள் அனைவர்க்கும் ஒரு வெற்றிகரமான உதாரணமாக திகழ்கிறார்கள்.

 இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் GDS தோழர்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு பங்கு கொண்ட அனைத்து அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் GDS என்ற ஒரு பிரிவினரே இல்லாத நிலையிலும் வேலைநிறுத்தத்தில் பங்கு கொண்ட கணக்குபிரிவு தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும் எங்களின்நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒற்றுமை ஒன்று மட்டுமே நம்முடைய மிகப் பெரிய அரணாகும்.

தொழிலாளர்ஒற்றுமைஓங்குக!                                         தொழிற்சங்கஒற்றுமைஓங்குக!!

ஒன்றுபடுவோம்! போராடுவோம்!!                                    போராடுவோம்!  வெற்றிபெறுவோம்!!

வெற்றிகிட்டும்வரைபோராடுவோம்!                                                               இறுதிவெற்றிநமதே!

போராட்டவாழ்த்துக்களுடன்

K. இராஜு                                                                           T. தமிழ்செல்வன்                                          V. ஸ்ரீதரன்
தலைவர்NFPE-P3                                                 கோட்டச்செயலர்NFPE-P3                          நிதிச்செயலர்NFPE-P3

R. சந்திரன்                                                                        G. ஸ்ரீனிவாசன்                                               S. அல்லி
தலைவர்NFPE-P4                                                 கோட்டச்செயலர்NFPE-P4                           நிதிச்செயலர்NFPE-P4

S. மனோகரன்                                                                R.விஷ்ணுதேவன்                                     C.செந்தில்ராஜா
தலைவர்NFPE GDS                                            கோட்டச்செயலர்NFPE GDS                          நிதிச்செயலர்NFPE GDS


AIGDSU

M. இரவீந்திரன்                               V. வீரமலை                             P. வெங்கடாசலம்
தலைவர்                                    கோட்டச்செயலர்                       நிதிச்செயலர்

FNPO– GDS

R. மகேஷ்குமார்                               R. முருகேசன்                   B. கோகுலகிருஷ்ணன்
தலைவர்                                     கோட்டச்செயலர்                      நிதிச்செயலர்

BPEU – GDS

C. சிவாஜி                                     M.P. துரைசாமி                         P. மணிவேல்
தலைவர்                                     கோட்டச்செயலர்                       நிதிச்செயலர்
C.சசிகுமார்
மாநில அமைப்புச்செயலர் (NFPEP3)

Saturday 30 December 2017



திருவரங்கம் NFPE - ன் முன்னாள் கோட்டத்தலைவரும், செயல் தலைவருமாகிய தோழர் K.கதிர்வேல் SPM, Srirangam North அவர்கள் இன்று இலாக்காவில்  இருந்து  பணி ஓய்வு பெறுகிறார்.  அவரது பணி ஓய்வு காலம் எல்லா வகையிலும் சிறந்து விளங்க திருவரங்கம் NFPE - ன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.  நாளை 31.12.2017 அன்று காட்டுப்புத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் மதியம் நடைபெறும் ஒரு சிறிய  விருந்தில் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

NFPE, SRIRANGAM 

Wednesday 29 November 2017

முன்னாள் தமிழ் மாநிலத்தலைவர் தோழர் P. மோகன் அவர்களின் பணி ஓய்வு காலம் சிறப்பாக அமைய திருவரங்கம் கோட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.......


NFPE, Srirangam

அஞ்சல் துறையில் தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளின் தீர்வினை வலியுறுத்தி NFPE சம்மேளனத்தின் அறைகூவலின்படி ஆர்ப்பாட்டம்!!!


   நமது அஞ்சல் துறையில் தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளின் தீர்வினை வலியுறுத்தி NFPE சம்மேளனத்தின் அறைகூவலின்படி ஆர்ப்பாட்டம்.

கோரிக்கைகள் ...

(1 ) திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான GDS ஊதியக் கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை விரைவில் அமல்படுத்திடுக.

(2 ) CSI மற்றும் RICT அமுலாக்கத்திற்கு முன்பாக அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்துகொடு - புதிய திட்டங்களின் பெயரில் இலக்கை நிர்ணயித்து ஊழியர்களை துன்புறுத்தாதே.

(3) சேமிப்பு கணக்குகளை வங்கிகளுக்கு தாரைவார்ப்பதை நிறுத்திடுக.

(4) புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திடுக.

(5) APS அஞ்சலகங்களை மூடுவதை நிறுத்திடுக.

(6) அஞ்சலக சேவையில் தனியாரை அனுமதிக்காதே.

(7) ஓய்வு பெற்ற GDS ஊழியர்களுக்கும் SDBS திட்டத்தின்படி ஓய்வு பலன்களை வழங்கிடுக.

(8) அஞ்சலக வேலைநாட்களை வாரம் ஐந்து நாட்களாக்கி எல்லா சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவித்துடுக.

(9) அனைத்து காலியிடங்களையும் GDS பதவி உள்பட நிரப்பிடுக.

  உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட அலுவலகம், திருவரங்கம் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.








போராட்ட வாழ்த்துக்களுடன்.....

    T. தமிழ்செல்வன்          
    கோட்டச் செயலர் P3, 

    G. ஸ்ரீனிவாசன்
    கோட்டச் செயலர் P4, 

    R. விஷ்ணுதேவன் 
     கோட்டச்செயளர் NFPE GDS.

    திருவரங்கக்கோட்டம்.

Tuesday 28 November 2017

  38 - வது தமிழ் மாநில மாநாடு செங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள K.R.G. திருமண மண்டபத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.  மொத்தம் உள்ள 146 சார்பாளர்களில் 138 சார்பாளர்களும்,  500 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்துக்கொண்டு மாநாட்டைச் சிறப்பித்தனர். மாநாட்டின் இரண்டாவது நாள் மகிளா கமிட்டியின் தோழியர் ஏன்ஜெல் சத்தியநாதன், தோழியர் மணிமேகலை ஆகியோரின் தலைமையில் கருத்தரங்கம் மிக அருமையாக களைகட்டியது.

  நமது கோட்டத்தில் இருந்து மூன்று சார்பாளர்களும், பதினைந்து பார்வையாளர்களும் கலந்துக்கொண்டு மாநாட்டைச் சிறப்பித்தனர்.  மாநாட்டில் நடந்த பொருளாய்வு கூட்டத்தில் திருவரங்க கோட்டத்தலைவர் தோழர் K. ராஜு, கோட்டச்செயலர் தோழர் T. தமிழ்செல்வன் மற்றும் நிதிச்செயலர் தோழர் V. ஸ்ரீதரன் ஆகியோர் பங்குக்கொண்டு தங்களுடைய கருத்துக்களை மிக ஆழமாக மாநாட்டில் பதிவுச்செய்தனர்.

  தோழர் C. சசிகுமார் மாநிலச்சங்க நிர்வாகியாக தன்னுடைய கருத்துக்களை மாநாட்டிலே பதிவுச்செய்தார்.





  
செங்கல்பட்டில் நடைபெற்ற NFPE அஞ்சல் மூன்றின் 38 வது தமிழ் மாநில மாநாட்டில் கீழ்காணும் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

மாநிலத்தலைவர்:
தோழர் : M.செல்வகிருஷ்ணன் HSG -1,
                 சங்கரன்கோவில் HO,
                கோவில்பட்டி கோட்டம்

துணைத்தலைவர்கள் :
தோழர்கள்:
N.சுப்ரமணியன், PM 
மேட்டுப்பாளையம் HO
K. மருதநாயகம், PA
திருச்சிராப்பள்ளி  HO
S. அய்யம் பெருமாள்
கோட்டார் SO,
 நாகர்கோயில் கோட்டம்

மாநிலச்செயலர் :
தோழர்: J. ராமமூர்த்தி, APM
T. நகர்  HO, சென்னை.

மாநில உதவிச்செயலர்கள்: 
தோழர்கள்:
R.   குமார் , PA, 
புதுக்கோட்டை HO
S.வீரன், Marketing Executive, 
வேலூர் HO
A. ராஜேந்திரன், PA,
திருப்பூர் HO
N. சிவசண்முகம், PA
கோயம்புத்தூர் HO
G. ராமமூர்த்தி, Marketing Executive
செங்கல்பட்டு HO

மாநில நிதிச்செயலர்:
தோழர்: A. வீரமணி, PA 
அண்ணாரோடு HO

மாநில உதவி நிதிச்செயலர்:
தோழர்: N. கோபால் , SPM, 
காஞ்சிபுரம் கேட்செரி

மாநில அமைப்புச்செயலர்கள்:
தோழர்கள்:
C. சசிகுமார், System Manager,
ஸ்ரீரங்கம் HO
C. மோகன், PA, 
அம்பத்தூர், தாம்பரம்   
 K. சுப்ரமணியன், SPM,
கலெக்டரேட்,
திண்டுக்கல் ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் திருவரங்கக்கோட்டத்தின் வாழ்த்துக்கள்.
  இந்த 38 - வது தமிழ் மாநில மாநாட்டில் முதன்முறையாக 9 நபர்கள் கொண்ட Technology Wing என்ற ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
  38 - வது மாநில மாநாட்டை மிகவும் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய செங்கல்பட்டு தோழர் G.ராமமூர்த்தி, தோழர் ராஜ்குமார் அவர்களுக்கும், அவர்களின் அணிக்கும் திருவரங்கம் கோட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.